Archives: 11/05/2018

Tamil Quarterly Subscription

If you would like to fill this form in English, please click here.

உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கானோர் ஒவ்வொரு நாளும் நமது அனுதின மன்னா தியான நூல் மூலம் ஊக்குவிக்கப்படுகிறார்கள். நீங்கள் கடவுளிடம் நெருங்கி வருவதன் மூலம் உங்கள் விசுவாசத்தில் வளர உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.

நமது அனுதின மன்னா காலாண்டு பதிப்பு தமிழில் அஞ்சல் மூலம் பெற கீழே உள்ள படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும்.

 

[contact-form-7 id="168630" title="Subscriptions TA (IN)"]

 

நமது அனுதின மன்னா தமிழ்…

விடாமுயற்சியோடு சமாதானத்தைத் தேடல்

தொடர்ந்து வலியினால் போராடிக் கொண்டிருக்கும்போதும், ஒரு சிறிய அசைவு கூட எதிரியின் கடுமையான தாக்குதல் போன்று வேதனையைத் தரும் போதும், நான் தொடர்ந்து தேவன் மீதுள்ள நம்பிக்கையை விடவில்லை. பிரச்சனை ஒன்று, என்னை வலதுபுறம் குத்துகிறது, பிரச்சனை இரண்டு என்னைப் பின்னாலிருந்து தள்ளுகிறது. பிரச்சனை மூன்று என் மூக்கை; குத்துகிறது. இப்படியே எனது பெலன் குன்றிய போது, எங்காகிலும் ஓடி ஒளிந்து கொள்வதே மேலாகத் தோன்றியது. ஆனாலும் என்னுடைய சூழலை மாற்றுவதோ அல்லது என் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதோ, இவையெதுவுமே என்னை வலியிலிருந்து தப்புவிக்கக் கூடாதிருந்தமையால் மெதுவாக தேவனைச் சார்ந்து வாழக் கற்றுக் கொண்டேன்.

எனக்கு ஊக்கமும், ஆறுதலும், தைரியமும் தேவைப்பட்டபோது, நான் ஜெபத்தோடு சங்கீதங்களை வாசிக்க ஆரம்பித்தேன். சங்கீதக்காரன் உண்மையாய்த் தன்னுடைய நிலைமையை தேவனிடம் சமர்ப்பிக்கின்றார். தாவீது ராஜா, தன்னுடைய மகன் அப்சலோம் தன்னைக் கொன்று விட்டு
ராஜ்ஜிய பாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தபோது, அவனிடமிருந்து ஓடி வந்தபோது பாடிய சங்கீதம் எனக்கு மிகவும் விருப்பமானது. தாவீது தன்னுடைய வேதனை நிறைந்த சூழலைப்பற்றி புலம்பியிருந்தாலும் (சங். 3:1-2) அவர் தேவனை நம்பி, அவருடைய பாதுகாப்பை நம்பி வந்து, தன்னுடைய ஜெபத்திற்கு பதிலளிக்குமாறு கேட்கின்றார். (வச. 3-4) தனக்கு என்ன நடக்குமோ என்று பயந்து அல்லது வருந்தி அவர் தன் நித்திரையை இழக்கவில்லை. ஏனெனில் அவர், தேவன் தன்னைப் பாதுகாத்து வழி நடத்துவார் என நம்பினார் (வச. 5-8).

உடல், மனரீதியான வேதனைகள் எதிரியைப் போன்று நம்மைத் தாக்கலாம். நாம் சோர்ந்து போய், இந்தப் போராட்டத்தின் முடிவு என்னவாகும் என்று தெரியாமல் கைவிட்டு விடவும் அல்லது அங்கிருந்து தப்பி விடவும் எண்ணலாம். ஆனால் தாவீதைப் போன்று தேவன் நம்மைத் தூக்கி விடுவார், அவருடைய மாறாத அன்பிற்குள்ளும், பிரசன்னத்திற்குள்ளும் நம்மை இளைப்பாறச் செய்வார் என்று தேவனை நம்பக் கற்றுக் கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

மகிழ்ச்சியும் ஞானமும்

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் "சத்தியத்தை அறிவோம்", பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32).

 

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை  பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

 

ஓர் தனிக் குரல்

முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் அமைதி மாநாட்டிற்குப் பிறகு, பிரெஞ்சு மார்ஷல் ஃபெர்டினாண்ட் ஃபோச் கசப்புடன், “இது சமாதானம் அல்ல. இது இருபது வருட தற்காலிக போர் நிறுத்தம்” என்றார். “அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் போரானது” பயங்கர மோதலாக இருக்கும் என்ற பிரபலமான கருத்துக்கு ஃபோச்சின் கருத்து முரண்பட்டது. இருபது ஆண்டுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஃபோச் சொன்னது சரிதான்.

நீண்ட காலத்திற்கு முன்பு, தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியான மிகாயா, இஸ்ரேலுக்கு கடுமையான இராணுவ முடிவுகளைத் தொடர்ந்து தீர்க்கதரிசனமாய் உரைத்தார் (2 நாளாகமம் 18:7). இதற்கு நேர்மாறாக, ஆகாபின் நானூறு பொய் தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு யுத்தத்தில் வெற்றியை முன்னறிவித்தனர். ஆகாபின் அரண்மனையைச் சேர்நத ஒருவன் மிகாயாவிடம், “இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்” (வச. 12). 

அதற்கு மிகாயா, “என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று”..(வச. 13), “இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்” (வச. 16) என்று சொல்லுகிறான். மிகாயா சொன்னது சரிதான். அராமியர்கள் ஆகாபை யுத்தத்தில் கொன்றனர் (வச. 33-34; 1 இராஜாக்கள் 22:35-36).

மிகாயாவைப் போலவே, இயேசுவைப் பின்பற்றும் நாமும் பிரபலமான மக்களின் நம்பிக்கைகளுக்கு முரணாகவே போதிக்கிறோம். இயேசு, “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொல்லுகிறார். இந்த செய்தி முரண்பாடாய் தெரிவதினால் அநேகர் அதை விரும்புவதில்லை. ஆனாலும் கிறிஸ்து ஓர்ஆறுதலான செய்தியைக் கொண்டு வருகிறார். தம்மிடம் வருகிற யாவரையும் அவர் வரவேற்கிறார்.